ஜோ ன்னு பேஞ்ச மழை....ஜில்லுனு அடிச்ச காத்து...ஏன்னா அது மழை சீசன் அப்ப தான் என் சீசன் ஆரம்பிச்சுச்சு....இதுவரைக்கும் வினோத் அண்ணே நம்பர வாங்கி பத்திரமா காண்டாக்டல வைச்சு இருந்த நா....சரி இன்னிக்கு போன் பண்ணுவோமேனு வியாழக்கிழமை டிசம்பர் 2 கால் பண்ணேன்....வினோத் அண்ணே சொல்லுங்க பாஸ்னு நல்லா பேசினாங்க.....நானும் அண்ணே அடுத்த வார எனர்ஜி பேஜஸ் மேட்டர் டைட்டில் என்னன்னானு கேட்டேன்...இதுல முக்கியமான விஷயம் என்னன்னா நா வினோத்குமார் அண்ணணோட தீவிர ஃபேன்......அதுனால வேற எக்ஸ்ட்ரா பிரஷர்....அந்த அண்ணனும் ஆன்லை எஜுகேஷன் தான் நம்ம எடுத்துகிட்ட டைட்டில்னு சொல்லி எப்படி கேள்வி கேக்கனும்....எந்த மாதிரி விஷயம் நமக்கு தேவைபடுதுன்னு எல்லாமே சொல்லி இருந்தாங்க.....
இதுல ஸ்பேஷல் என்னன்னா மறுநாள் எனக்கு யுனிவர்சிட்டி எக்ஸாம்......அந்த சமயத்துல என் மனசுல இந்த அஸைன்மண்ட்ட மட்டும் முடிக்கலான நம்ம பேர ஆனந்த விகடன்ல நினைச்சு கூட பாக்க முடியாதுனு மட்டும் தான் ஓடிகிட்டு இருந்துச்சு...உடனே பசங்களுக்கு போன் அடிச்சு ஆன்லைன் எஜுகேஷன் இன்ஸ்டிடுயூட் எங்க இருக்குனு விசாரிச்சு....ஒரு வழியா ரிலையன்ஸ் வேர்ல்டுல இருக்கறது தெரிஞ்சு அங்க உள்ள மேனஜர் கிட்ட பேசிட்டு .....ஈவினிங் வந்து போட்டோ எடுத்துக்குறேன் சார்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்....வெளில வந்த உடன சிவபாலனுக்கு போன் பண்ணேன்.....மாப்ல காலேஜ்ல இருக்கேண்டா...இப்ப கிளம்பினாலும் 5 மணிக்கெல்லாம் அங்க வந்துடுவேன்னு சொன்னான்...சரிடா வானு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.......
அது தான் அஸைன்மெண்ட் முடிஞ்சுருச்சேனு பாத்தா அந்த ரிலையன்ஸ் மேனேஜர் போன் பண்ணி தம்பி கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நா என் ஹெட் ஆபீஸ்ல கேட்டு சொல்லுறேன்....அப்பறம் போடலாம்னு சொல்லிட்டான்....சரி சார்...போட்டோ மட்டுமாவது எடுத்துக்குறொம் வேனும்னா படத்தில் இருப்பவர்கள் மாடல்களேனாவது போட்டுகளாம்னு கேட்டோம்...ஒரு வழியா அதுக்கு ஒத்துகிட்டார் அந்த மேணேஜர்.....
நல்லவேளை அந்த மேனஜிருக்குஹெட் அபீஸ்ல இருந்து கொஞ்ச நேரத்துல எல்லாம் மெயில் வந்துடுச்சு...ஓகேன்னு......நானும் சிவபாலனும் போட்டோ எடுத்துட்டு நக் இருந்து கிளம்பிட்டோம்...அது தான் காலைலயே மேட்டர் எடுத்தாச்சே அப்பறம் என்ன......
இதுக்க அப்புறம் தான் என்னோட ரியல் பிரஷர் ஆரம்பமானது...இத்தன நாள் சக்தி விகடன்ல கோவில் குளம் பரிகாரம்னு எழுதிகிட்டு இருந்தோம்....இப்ப என்ன பண்ண போறோம்னு தெரிய;லயேங்குற பயம்...எங்க வினோத் அண்ணே நம்மல பத்தி எதாவது நெனச்சுரு வாங்களோங்குற பயம்னு...பயம் மட்டுமே இருந்துச்சு கம்பூட்டர் முன்னாடி உக்காந்து....டைப் பண்ண ஆரம்பிச்சப்ப என் மனசுல ஓடினது எல்லாம் ஒரே விஷயம் தான்...இதே வினோத் அண்ணே மீட்டிங்ல சொன்ன எண்ற்றி லிஸ்ட்,,,எக்ஸிட் லிஸ்ட்டு தான்...எண்ட்ரி லிஸ்ட்ல இருந்த என் பயம் எக்ஸிட் லிஸ்ட நோக்கி போனத என்னால உணர முடிந்தது.....
"முன்பெல்லாம் படிச்சத விரல் நுனில வைச்சு இருக்கேன்னு சொல்லுவாங்க ஆனா இப்ப விரல் நுனில தான் படிக்கவே ஆரம்பிக்குறாங்கனு" ஆரம்பிச்சு......ஒவ்வோரு விஷயத்துலயும் கவனம் செலுத்தி அந்த அஸைன்மெண்ட்ட எழுதினேன் காரணம் புக்குல வரணுங்கிறதுக்காக அல்ல....வினோத் அண்ணேகிட்ட இருந்து நல்ல கமெண்ட் வரணும்கிறதுக்காக........ரெண்டு மணி நேர டைப்பிங் முடிஞ்சு மெயில் அனுப்பிட்டு ஹாஸ்டலுக்கு போக மணி 10 ஆகிடுச்சு.....மறுநாள் எக்ஸாம் மதியம்கிறதுனால காலில அவசரம் அவசரமா படிச்சு பரிச்ச எழுதி ஏதோ ஒரு வழியா 87/100 வாங்கிட்டேன்......
எக்ஸாம் ஹால்ல இருந்து வெளில வர்ரேன் வினோத் அண்ணண்ட்ட இருந்து கால் வருது....பாஸ் அந்த மேனஜர் பேரு என்னனு கேட்டாங்க நானும் சொன்னேன்...ஓகே பாஸ்னு வைச்சுட்டாங்க....நானும் என்னடா நல்ல இருக்கு நல்லா இல்லனு ஓன்னுமே சொல்லாம வைச்சுட்டரேனு நினைச்சுகிட்டு இருந்தேன்......இதுக்கு இடைல திருச்சி மீட்டிங் சரினு அட்டன் பண்ண போனா அங்க ஒரு நம்ம ஸ்டுடண்ட் குரூப் என்ன பாஸ் கலக்குறீங்க ஆனந்த விகடனுக்கு எல்லாம் அஸைன்மெண்ட் பண்ணுறீங்கனு என்ன கலாய்க்க(பெயர் வெளியிட விரும்பவில்லை).....நானும் பயத்துலயே இருந்தேன்....
அது வரைக்கும் வியாழக்கிழமை தான் ஆனந்த விகடன்ல மேட்டர் வருமா?வராதானு தெரியும்னு நெனைச்சுகிட்டு இருந்தேன்......
செவ்வாய்கிழமை மதியம் பிரவுஸிங் செண்டருல பேஸ்புக்குல இண்ட் ரஸ்டிங்கா சாட்டிங் ஓடிகிட்டு இருந்துச்சு........ஒரு போன் கால் பாத்தா வினோத் அண்ணே....பாஸ் போன அஸைன்மெண்ட் நல்லா பண்ணீங்க...மேட்டர்ல எடிட்டிங் பண்ண வேண்டிய அவசியமே இல்ல இந்த அளவுக்கு தெளிவா இருந்துச்சு சொன்னாங்க...எனக்கு எப்படி ரீயாக்ட் பண்ணுறதுன்னே தெரியல.....அடுத்த வார அஸைன்மெண்ட் பண்ணுரீங்களா பாஸ்னு அவர் கேட்டவொடன எனக்கு மனசுல கண்ண ரெண்டாவது லட்டு தின்ன ஆசையானு ஓட ஆரம்பிச்சுருச்சு........ஓகேனானு சொல்லிட்டு எல்லா விவரத்தையும் கேட்டுகிட்டேன்.......(அந்த அஸைமண்ட் என்னனு அடுத்த போஸ்ட்ல தான் சொல்லுவேண்)
அந்த வாரம் என் ப்ராஜக்ட் விஷயமா சென்னை போக வேண்டி இருந்தது....சரி ஆபீஸ் பக்கம் போய் வினோத் அண்ணன் கிட்ட நான் தான் ஸ்ரீராம்னு அறிமுகம் பண்ணிக்கலாம்னு கிளம்பி போணேண்.....வினோத் அண்ணனுக்கு போன் பண்ணி அண்ணே நா இப்ப சென்னைல இருக்கேன்......உங்கள பாக ஆபீஸ் வரலாமானு கேட்டேன்...ஓகே பாஸ் வாங்கனு சொன்னாங்க....சரினு 20 நிமிஷத்துல ஆபீஸ்க்கு போய்ட்டேன்.....அங்க போனா செக்யூரிட்டி என்ன பாத்து யாருனு கேட்டரு...அப்ப என் மைண்டுல ஆனந்த விகடன் ஆபிஸ்ல என்ன பாத்து யாருனுகேட்ட முதல் ஆள் நீங்க தங்கன்னானு சொல்லனும்னு நெனச்சேன்....ஆனா அந்த அளவுக்கு வொர்த் இல்லங்கிறதால....ஸ்டண்ட் ரிப்போர்ட்டர்னு சொல்லிட்டு உள்ள போய் வினோத் அண்ணன பாத்தேன்...அவங்க வா வெளில போய் டீ சாப்பிட்டுகிட்டே பேசல்லம்னு ஆபீஸ் பக்கத்துல உள்ள டீக்கடைக்கு கூட்டிட்டு போனாங்க...அங்ககிட்ட தட்ட ஒரு ஒரு மணி நெரம் பேசி இருப்போம்....அந்த ஒரு மணி நேரம் தான் என்ன ஒரு பத்திரிக்கையாளனாஅ மாத்தினுச்சு...அப்ப அங்க வந்த மாரியப்பண் அண்ணே போட்டோகிராபர் நல்லா பேசினாங்க....நிரையா அஸைன்மெண்ட் பண்ணுன்னு சொன்னாங்க.......
ஒருவழியா வியாழக்கிழமை புக்கு கைக்கு வந்துச்சு கை தானா எனர்ஜி பக்கங்கள நோக்கி போச்சு......அங்க என் பேரும் வினோத் அண்னன் பேரும் தான் இருந்துச்சு.....அப்ப ஏற்பட்ட சந்தோஷம் தான் என்ன ஆனந்த விகடன்ல ஒரு மூலைல பெற்ற இடத்தை தக்க வைக்க உதவியா இருந்துச்சு.......நா எழுதின மேட்டர் கொஞ்சம் கூட மாறாம இருந்தது எக்ஸ்ட்ரா மகிழ்ச்சி.......இது தான் விகடன்ல எனக்கு கிடைச்ச டர்னிங் பாயிண்ட்......இனி தான் ஆரம்பம்,,,,,,
இதுல வேற என் பேர ச.ஸ்ரீராம்+விகடன்னு கூகுள்ல சர்ச் பண்ணா இந்த அஸைண்மெண்ட் தான் வந்து நிக்குது நீங்களே பாருங்களேண்......
-
எனர்ஜி தொடரும்